தினமணி 24.03.2013
நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்: 263 பேர் விண்ணப்பம்
புதுக்கோட்டை நகராட்சியில் பொன் விழா ஆண்டு நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் இலவசத் தொழில் நுட்ப பயிற்சி பெற 160 ஆண்கள் 103 பெண்கள் உள்பட மொத்தம் 263 பேர் வெள்ளிக்கிழமை விண்ணப்பித்தனர்.
மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் கணினியில், டாலி, டிடிபி, ஹார்டுவேர், பிபிஓ, எம்.எஸ். ஆபீஸ், இன்டர்நெட், சாப்ட்ஸ்கில், கம்யூட்டர் அப்ளிக்கேஷன், உணவக விடுதியில் விருந்தோம்பல் பண்பாட்டுத்திறன் மேம்படுத்தல் போன்ற பயிற்சிகளை கோர், நேஷனல் அகாதெமி, இந்தியா ஸ்கில், டிசிபிஎஸ் போன்ற நிறுவனங்கள் மூலம் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகின்றன.
இதில் சேர 18 வயது முதல் 35 வயதுக்குள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள இருபால் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் சேரும் ஒரு நபருக்கு ரூ. 6,100 மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பயிற்சியும் கிடைக்கிறது. கடந்த 2009 முதல் புதுகை நகராட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 1200 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தேர்வு முகாமுக்கு, நகராட்சித்தலைவர் (பொ) எஸ். அப்துல்ரகுமான் தலைமை வகித்து விண்ணப்ப விநியோகத்தை தொடக்கி வைத்தார்.
2012-13 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் கட்டப்பயிற்சிக்காக தற்போது இளைஞர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர். ஏற்பாடுகளை சமுதாய அமைப்பாளர் ஆர். ராக்கு குழுவினர் செய்திருந்தனர்.
நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்: 263 பேர் விண்ணப்பம்
புதுக்கோட்டை நகராட்சியில் பொன் விழா ஆண்டு நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் இலவசத் தொழில் நுட்ப பயிற்சி பெற 160 ஆண்கள் 103 பெண்கள் உள்பட மொத்தம் 263 பேர் வெள்ளிக்கிழமை விண்ணப்பித்தனர்.
மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் கணினியில், டாலி, டிடிபி, ஹார்டுவேர், பிபிஓ, எம்.எஸ். ஆபீஸ், இன்டர்நெட், சாப்ட்ஸ்கில், கம்யூட்டர் அப்ளிக்கேஷன், உணவக விடுதியில் விருந்தோம்பல் பண்பாட்டுத்திறன் மேம்படுத்தல் போன்ற பயிற்சிகளை கோர், நேஷனல் அகாதெமி, இந்தியா ஸ்கில், டிசிபிஎஸ் போன்ற நிறுவனங்கள் மூலம் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகின்றன.
இதில் சேர 18 வயது முதல் 35 வயதுக்குள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள இருபால் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் சேரும் ஒரு நபருக்கு ரூ. 6,100 மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பயிற்சியும் கிடைக்கிறது. கடந்த 2009 முதல் புதுகை நகராட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 1200 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தேர்வு முகாமுக்கு, நகராட்சித்தலைவர் (பொ) எஸ். அப்துல்ரகுமான் தலைமை வகித்து விண்ணப்ப விநியோகத்தை தொடக்கி வைத்தார்.
2012-13 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் கட்டப்பயிற்சிக்காக தற்போது இளைஞர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர். ஏற்பாடுகளை சமுதாய அமைப்பாளர் ஆர். ராக்கு குழுவினர் செய்திருந்தனர்.