Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூர் பேருந்து நிலையத்தில் நகராட்சித் தலைவர் ஆய்வு

Print PDF

தினமணி 16.09.2009

கரூர் பேருந்து நிலையத்தில் நகராட்சித் தலைவர் ஆய்வு

கரூர், செப். 15: கரூர் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நகராட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

கரூர் முத்துகுமாரசுவாமி பேருந்து நிலையத்தில் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து, நகராட்சித் தலைவர் ப. சிவகாமசுந்தரி, கவுன்சிலர்கள் இரா. பிரபு, ஆண்டாள் பாலகுரு, சுப்பன் ஆகியோர் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

பின்னர், சம்வப இடத்துக்கு வந்த நகராட்சி ஆணையர் ஆர். ரமணியிடம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சுகாதாரக்கேடு விளைவிக்கும் வகையில் உள்ள கழிப்பறையை தூய்மையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். அதைத்தொடர்ந்து, ரூ. 4 லட்சத்தில் பேருந்து நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் ஆணையர்.

Last Updated on Wednesday, 16 September 2009 11:10