Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விளம்பர பேனர்கள்: அரசு எச்சரிக்கை

Print PDF

தினமணி 17.09.2009

விளம்பர பேனர்கள்: அரசு எச்சரிக்கை

காஞ்சிபுரம், செப். 16: காஞ்சிபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் முறையான அனுமதியின்றி அரசியல், சமயம் சார்ந்த டிஜிட்டல், விளம்பர பேனர்கள், பலகைகளை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நகரின் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பேனர்கள், விளம்பர தட்டிகள், பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், தேவையற்ற ஆக்கிரமிப்புகள் செய்யப்படுகின்றன. எனவே, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல்,சமயம் சார்ந்த நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கல் தொடர்பாகவும், வியாபார விளம்பரங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 17 September 2009 05:50