Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஒயிலாட்டம், மேளதாளத்துடன் வீதி, வீதியாக பயணம்

Print PDF
தினமலர்        08.04.2013

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஒயிலாட்டம், மேளதாளத்துடன் வீதி, வீதியாக பயணம்


தூத்துக்குடி தூத்துக்குடியில் ஒயிலாட்டம், தெருநாடகம் மூலம் போல்பேட்டை கிழக்குப்பகுதி முழுவதும் பேரணியாக சென்று டெங்கு விழிப்புணர்வு நடந்தது. இதனை ஒட்டி நடந்த மருத்துவ முகாமில் 250 பேர் பங்கேற்று பயன் பெற்றனர்.தூத்துக்குடி மாநகராட்சி மூலம் டெங்கு விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கை பணிகள் மேயர் சசிகலாபுஷ்பா உத்தரவின் பேரில் கமிஷனர் மதுமதி தலைமையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி பகுதியில் டெங்கு பாதிப்பு அவ்வளவாக இல்லாத நிலை உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ச்சியாக இதன் தடுப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

இது சம்பந்தமாகபல்வேறு விழிப்புணர்வு மக்களுக்கு இடைவிடாது அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி அலுவலர்களுக்கு கமிஷனர் மதுமதி உத்தரவிட்டுள்ளார். இதனால் மாநகராட்சியில் இது போன்ற விழிப்புணர்வு நடந்து வருகிறது. போல்பேட்டை கிழக்கு பகுதி முழுவதும் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரசு ஆஸ்பத்திரி நர்ஸ்கள், மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. பேரணிக்கு முன்பாக மேள தாளம், ஒயிலாட்டம், தெரு நாடகம் போன்றவை நடத்தப்பட்டு டெங்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. பேரணியை மாநகராட்சி கமிஷனர் மதுமதி துவக்கி வைத்தார்.

சுகாதார அதிகாரி (பொ) டாக்டர் முத்துலட்சுமி, டாக்டர் ஜெயந்திமச்சோடா, டாக்டர் தேவகுமாரி, சுகாதார ஆய்வாளர் திருமால்சாமி, மாநகராட்சி சமுதாய அலுவலர் சரவணபாமா மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணியை தொடர்ந்துபோல்பேட்டை நர்சிங் கல்லூரியில் மாநகராட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டது.