Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுயஉதவிக் குழுக்களின் பெயர்ப்பலகை திறப்பு

Print PDF
தினமணி        12.04.2013

சுயஉதவிக் குழுக்களின் பெயர்ப்பலகை திறப்பு


புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் பெயர்ப்பலகை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

உருளையன்பேட்டை கோவிந்தசாலை பகுதியில் செயல்படும் வசந்தம் நேயம் சுபதினம் மகளிர் சுய உதவிக்குழு, வசந்தம் தீப ஒளி சிக்கனம் மற்றும் கடன் நாணயச்சங்கம் மகளிர் குழு, வசந்தம் ஓம் சரணம் மகளிர் சுய உதவிக்குழு ஆகியவற்றின் பெயர்ப்பலகைகளை அரசுக் கொறடா ஜி.நேரு திறந்து வைத்தார்.

புதுச்சேரி நகராட்சி மகளிர் குழுக்களின் திட்ட அதிகாரி இரிசன், தொகுதி மகளிர் குழுப் பொறுப்பாளர் விஜயலட்சுமி, குழுத் தலைவியர் திலகவதி, சுஜாதா, இந்திரா, செயலர்கள் சாவித்திரி, பிரீத்தி, பெண்ணரசி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.