Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

17-ல் தெற்கு தில்லி மாநகராட்சி வார்டு கமிட்டி தேர்தல்

Print PDF

தினமணி                12.04.2013

17-ல் தெற்கு தில்லி மாநகராட்சி வார்டு கமிட்டி தேர்தல்


தெற்கு தில்லி மாநகாரட்சியின் வார்டு கமிட்டி தேர்தல் இம்மாதம் 17-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வார்டு கமிட்டிகளின் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் 17-ம் தேதியன்று மாநகராட்சியின் தலைமை அலுவலகமான டாக்டர் எஸ்பிஎம் சிவிக் சென்டரில் லாலா ஹன்ஸ்ராஜ் குப்தா அரங்கில் தேர்தல் நடைபெறும்.

தெற்கு மண்டலத்துக்கு நண்பகல் 12 மணிக்கும், நஜஃப்கர் மண்டலத்துக்கு பிற்பகல் 1 மணிக்கும், மத்திய மண்டலத்துக்கு பிற்பகல் 2 மணிக்கும், மேற்கு மண்டலத்துக்கு பிற்பகல் 3 மணிக்கும் தேர்தல் நடைபெறும்' என்று கூறப்பட்டுள்ளது.

வடக்கு தில்லியில் 18-ல் தேர்தல்: இதனிடையே வடக்கு தில்லி மாநகராட்சி நிலைக் குழுத் தலைவர் தேர்தல் இம்மாதம் 18-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வடக்கு தில்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  "நிலைக்குழு தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் டாக்டர் எஸ்பிஎம் சிவிக் சென்டரிலுள்ள சத்யா நாராயணன் பன்சல் அரங்கில் 18-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும்' என்று கூறப்பட்டுள்ளது.