Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தஞ்சை மாநகராட்சி அறிவிப்புக்குப் பாராட்டு

Print PDF
தினமணி        12.04.2013

தஞ்சை மாநகராட்சி அறிவிப்புக்குப் பாராட்டு


தஞ்சை நகரை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதற்கு இரு சங்கங்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலர் சொர்ணா. அறிவழகன் தெரிவித்தது:

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது, பெருவுடையார் கோவிலுக்கு ரூ. 51 லட்சத்தில் தேர் வழங்குவது, புறவழிச்சாலைக்கு ரூ. 98 கோடி ஒதுக்கீடு, அரசுக் கால்நடை கல்லூரி, பொறியியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை உள்ளிட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து தஞ்சை நகரை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தி அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி.

இதன் மூலம் தஞ்சை வளர்ச்சி அடையவும், விவசாயத்தை மட்டும் நம்பி வாழும் தஞ்சையில் தொழில் வளர்ச்சி அடையச் செய்யவும் உதவும். இதேபோல, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் முருகு. வீரமணி தெரிவித்திருப்பது:  தஞ்சை மக்களின் நீண்டகாலக் கனவை நனவாக்கும் வகையில் தஞ்சை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தி அறிவித்த முதல்வருக்கு நன்றி.