Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காட்பாடியில் உலக புத்தக தின விழா மேயர் பங்கேற்பு

Print PDF

தினத்தந்தி              29.04.2013

காட்பாடியில் உலக புத்தக தின விழா மேயர் பங்கேற்பு 

காட்பாடி காந்திநகரில் உள்ள அறிஞர் அண்ணா கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு புதிய உறுப்பினர், புரவலர் சேர்க்கை, மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விழா காங்கேயநல்லூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடந்தது.

வாசகர் வட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். உதவி தொடக்க கல்வி அலுவலர் கோவிந்தசாமி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட துணைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மேயர் கார்த்தியாயினி கலந்து கொண்டு புதிய புரவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார். கவுன்சிலர் ரமேஷ், தலைமை ஆசிரியைகள் மஞ்சுளா, ராஜலட்சுமி, உமாமகேஸ்வரி ஆகியோர் பேசினர். செயற்குழு உறுப்பினர்கள் வீரராகவன், பழனி, சேட்டு, விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிளை நூலகர் மஞ்சுளா நன்றி கூறினார்.