Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 2 நவீன பூங்காக்கள் அமைச்சர் ஆனந்தன் திறந்து வைத்தார்

Print PDF
தினத்தந்தி                01.05.2013

திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 2 நவீன பூங்காக்கள் அமைச்சர் ஆனந்தன் திறந்து வைத்தார்


திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2 நவீன பூங்காக்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்.

2 பூங்காக்கள்

திருப்பூர் திருமுருகன்பூண்டி பேரூராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட ராக்கியாபாளையம் பாலாஜி நகரில் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாடு மற்றும் பேரூராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் 1 ஏக்கர் பரப் பளவில் ரூ.30 லட்சம் மதிப் பிலும், இதேபோல் 1-வது வார்டு தேவராயம்பாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத் தின் கீழ் 38 சென்டில் ரூ.15 லட்சம் மதிப்பில் 2 பூங்காக்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்களின் பயன் பாட்டுக்காக இந்த 2 பூங் காக்களின் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். அவினாசி எம்.எல்.ஏ. கருப்பசாமி, பேரூ ராட்சிகளின் உதவி இயக்குனர் கலைவாணன், பூண்டி பேரூராட்சி துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பூண்டி பேரூராட்சி செயல் அதிகாரி நந்தகோபால் வர வேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் குணசேகரன், முதலாவது மண்டல தலைவர் ராதா கிருஷ்ணன், அவினாசி பேரூ ராட்சி தலைவர் ஜெகதாம் பாள் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந் தினராக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் கலந்து கொண்டு 2 பூங்காக் களையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பூங்காக் களில் உள்ள புல் தரைகள், பூச்செடிகள், விளையாட்டு உபகரணங்களை நன்கு பரா மரிக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

விழாவில் அவினாசி தாசில் தார் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. மகாலிங்கம், பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் கோபால், ராம சாமி, அ.தி.மு.க. நிர்வாகிகள் பழனிச்சாமி, கணேஷ், ராஜேந் திரன், சேகர் கவுன்சிலர்கள் ராஜேந்திரன், சண்முகம், கார்த்திகேயன், அய்யப்பன், நடராஜன் உள்பட திரளான வர்கள் கலந்து கொண்டனர்.