Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

Print PDF
தினமணி       09.05.2013

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்


செங்கம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வேலூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மலையமான்திருமுடிகாரி தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் சென்னம்மாள் முருகன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மோகன்ராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில், பேரூராட்சி உறுப்பினர்கள், தொண்டு நிறுவன இயக்குநர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மலையமான்திருமுடிகாரி, பிளாஸ்டிக் பொருள்களை முழுமையாக தடை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் உடனே அபராதம் விதிக்க வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து, செங்கம் வளையாம்பட்டு சாலையில் உள்ள தாமரைக்குளத்தை அவர் பார்வையிட்டார். குளத்தை ரூ.35 லட்சம் செலவில் தூர்வாரி அழகுபடுத்துவது குறித்து அவர் ஆய்வு செய்தார்.

செங்கம் ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் கிருஷ்ணகுமார், இந்தின் வங்கி மேலாளர் ராஜசேகர், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர் ரமேஷ் கார்த்திகேயன், பேரூராட்சி துணைத் தலைவர் பார்த்தசாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.