Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாளையங்கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டம் மேயர் விஜிலாசத்யானந்த் தொடங்கிவைத்தார்

Print PDF
தினத்தந்தி       10.05.2013

பாளையங்கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டம் மேயர் விஜிலாசத்யானந்த் தொடங்கிவைத்தார்


பாளையங்கோட்டையில் இருந்து புறப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டத்தை மேயர் விஜிலாசத்யானந்த் தொடங்கி வைத்தார்.

நினைவு ஜோதி

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம் வீரசக்கதேவியின் ஆலய திருவிழாவையொட்டி வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு ஜோதி 14-ம் ஆண்டு தொடர் ஓட்டம் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் நேற்று தொடங்கியது. இதையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மேயர் விஜிலாசத்யானந்த் மாலை அணிவித்து நினைவு ஜோதி தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நினைவு ஜோதி பாளையங்கோட்டையில் இருந்து தொடர் ஓட்டமாக பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்றது.

இந்தநிகழ்ச்சியில் வணிகர் சங்க தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன், பாளையங்கோட்டை மண்டல தலைவர் எம்.சி.ராஜன், அ.தி.மு.க. மாநகர மாவட்ட முன்னாள் செயலாளர் பாப்புலர் முத்தையா, வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.