Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மா உணவகப் பணிகள் மும்முரம்

Print PDF
தினமணி        16.05.2013

அம்மா உணவகப் பணிகள் மும்முரம்


திருநெல்வேலி மாநகராட்சியில் அம்மா உணவகம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

 திருநெல்வேலி உள்பட 9 மாநகராட்சிகளில் தலா 10 இடங்களில் அம்மா உணவகங்கள் இம் மாத இறுதியில் தொடங்கப்படும் என  பேரவையில் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை அறிவித்தார். இதற்கு முன்னதாக சில நாள்களாகவே திருநெல்வேலி மாநகராட்சியில் இந்த உணவகங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. அவ்வகையில் மேலப்பாளையத்திலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தையொட்டியும், தச்சநல்லூர் சிவன்கோவில் தெருவிலும் 99 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன.

 பேட்டையிலுள்ள நல மையத்திலும், திருநெல்வேலி நகரம் தொண்டர் சன்னதியிலும், பாளையங்கோட்டை ஜவாஹர் திடலிலும் உணவகப் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. மேலும் 5 இடங்கள் விரைவில் தேர்வு செய்யப்பட்டு உணவகம் அமைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த உணவகங்கள் 1,200 சதுரஅடி பரப்பில் அமைக்கப்படுகின்றன. ஒவ்வோர் உணவகமும் 14 உறுப்பினர்கள் கொண்ட சுயஉதவிக் குழுவினரால் நடத்தப்படவுள்ளது. இதற்காக மகளிர் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.