தினமணி 26.05.2013
கோத்தகிரியில் அம்மா உணவகம்?
கோத்தகிரியில் உள்ள உணவகங்களில் கடும் விலை உயர்வால் அதிருப்தி அடைந்துள்ள பொதுமக்கள், விலை குறைவான அம்மா உணவகம் வருமா என எதிர்பார்க்கின்றனர்.
கோத்தகிரியில் காய்கறிகள் மற்றும் இதரப் பொருள்கள் விலை உயர்வு எனக் கூறி, உணவகங்களில் உணவு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.12 முதல் 15 வரை விற்கப்பட்ட புரோட்டா, தற்போது ரூ.20 முதல் 25 வரையும், அளவு சாப்பாடு ரூ.60, சிக்கன் ரூ.75, மீன் ரூ.70 என அதிக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மலிவு விலை அரிசியில் உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். சில சிற்றுண்டியகங்களில் மட்டும் விலை குறைவாக இருக்கிறது. இந்த விலையேற்றத்தால் உள்ளூர் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கோத்தகிரியில் விரைவில் அம்மா உணவகம் திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோத்தகிரியில் அம்மா உணவகம்?
கோத்தகிரியில் உள்ள உணவகங்களில் கடும் விலை உயர்வால் அதிருப்தி அடைந்துள்ள பொதுமக்கள், விலை குறைவான அம்மா உணவகம் வருமா என எதிர்பார்க்கின்றனர்.
கோத்தகிரியில் காய்கறிகள் மற்றும் இதரப் பொருள்கள் விலை உயர்வு எனக் கூறி, உணவகங்களில் உணவு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.12 முதல் 15 வரை விற்கப்பட்ட புரோட்டா, தற்போது ரூ.20 முதல் 25 வரையும், அளவு சாப்பாடு ரூ.60, சிக்கன் ரூ.75, மீன் ரூ.70 என அதிக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மலிவு விலை அரிசியில் உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். சில சிற்றுண்டியகங்களில் மட்டும் விலை குறைவாக இருக்கிறது. இந்த விலையேற்றத்தால் உள்ளூர் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கோத்தகிரியில் விரைவில் அம்மா உணவகம் திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.