Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அம்மா உணவகம் அமைக்கும் பணி தீவிரம்

Print PDF
தினத்தந்தி       30.05.2013

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அம்மா உணவகம் அமைக்கும் பணி தீவிரம்


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அம்மா உணவகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அம்மா உணவகம்


முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் வகையில் சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து மே மாதம் இறுதிக்குளம் மற்ற மாநகராட்சிகளில் தலா 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்பேரில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அம்மா உணவகங்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதே நேரத்தில் ஒரு உணவகத்துக்கு 12 பேர் வீதம் 120 பேருக்கு சென்னை மற்றும் தூத்துக்குடியில் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது.

மும்முரம்

தூத்துக்குடி திரேஸ்புரம், சவேரியார்புரம், புதிய பஸ்நிலையம், ராஜாஜி பூங்கா, சத்திரம் தெரு, லூர்தம்மாள்புரம், ஜார்ஜ்ரோடு, ஸ்டேட் வங்கி காலனி, 2-ம் கேட் (வி.வி.டி. மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே, சந்தணமாரியம்மன் கோவில் தெரு(மீன் மார்க்கெட் அருகே) ஆகிய 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உணவகம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

ஆனால் இந்த பணிகள் நாளைக்குள் முடிக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. முதல்-அமைச்சர் அறிவித்தது போன்று நாளைக்குள் உணவகம் தொடங்கப்படுமா என்று பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் உணவகம் அமைக்கும் பணியில் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.