தினமணி 31.05.2013
மலிவு விலை உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கான முன்னோட்டம்
வேலூர் மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட உள்ள மலிவு விலை உணவகத்தில் உணவு தயாரிப்புக்கான முன்னோட்டத்தை மேயர் பா. கார்த்தியாயினி வியாழக்கிழமை துவக்கி வைத்தார்.
வேலூர் மாநகராட்சி 52-வது வார்டு கஸ்பா பகுதி நெடுந் தெருவில் மலிவு விலை உணவகம் திறக்கப்பட உள்ளது. அங்கு உணவு தயாரிப்பதற்கான முன்னோட்டம் நடைபெற்றது. இதை மேயர் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், நெடுந்தெருவில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
துணை மேயர் வி.டி. தர்மலிங்கம், ஆணையர் ஜானகி, மாநகர நல அலுவலர் பிரியம்வதா, மாமன்ற உறுப்பினர் அயூப்கான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மலிவு விலை உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கான முன்னோட்டம்
வேலூர் மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட உள்ள மலிவு விலை உணவகத்தில் உணவு தயாரிப்புக்கான முன்னோட்டத்தை மேயர் பா. கார்த்தியாயினி வியாழக்கிழமை துவக்கி வைத்தார்.
வேலூர் மாநகராட்சி 52-வது வார்டு கஸ்பா பகுதி நெடுந் தெருவில் மலிவு விலை உணவகம் திறக்கப்பட உள்ளது. அங்கு உணவு தயாரிப்பதற்கான முன்னோட்டம் நடைபெற்றது. இதை மேயர் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், நெடுந்தெருவில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
துணை மேயர் வி.டி. தர்மலிங்கம், ஆணையர் ஜானகி, மாநகர நல அலுவலர் பிரியம்வதா, மாமன்ற உறுப்பினர் அயூப்கான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.