Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பூரில் 10 இடங்களில் அம்மா உணவகம் திறப்பு

Print PDF
தினமணி        03.06.2013

திருப்பூரில் 10 இடங்களில் அம்மா உணவகம் திறப்பு


திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.

  தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்களை திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதன்படி, திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. டவுன்ஹால் பகுதி குமரன் வணிக வளாகம், பழைய பேருந்து நிலையம், முதலாவது மண்டல அலுவலக வளாகம்(15 வேலம்பாளையைம்), 15 வேலம்பாளையம் பழைய நகராட்சி அலுவலக வளாகம், ஆத்துப்பாளையம், பாண்டியன் நகர், சந்திராபுரம்,

4 ஆவது மண்டல அலுவலகம்(நல்லூர்), தென்னம்பாளையம் உள்பட 10 இடங்களில் தலா ரூ.25 லட்சம் செலவில் அம்மா உணவகத்துக்கு புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

சென்னை தலைமையச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஜெயலலிதா மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் அம்மா உணவகத்தை திறந்து வைத்தார்.

 அதையடுத்து, திருப்பூரில் குமரன் வணிக வளாக அம்மா உணவகத்தில் மலிவு விலை உணவு விநியோகத்தை அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தொடங்கி வைத்தார். ஆட்சியர் கு.கோவிந்தராஜ், மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மண்டலத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கே.ஆர்.செல்வராஜ், மாநகரப் பொறியாளர் எம்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அம்மா உணவகத்தில் ரூ.1-க்கு 1 இட்லி, சாம்பார், ரூ.5-க்கு சாம்பார் சாதம், ரூ.3-க்கு தயிர் சாதம் வழங்கப்படுகிறது. அம்மா உணவகத்தில் தினமும் காலையில் 300 பேருக்கு இட்லி, சாம்பார், மதியம் 300 பேருக்கு சாம்பார் சாதம், 300 பேருக்கு தயிர் என மொத்தம் 900 பேருக்கு மலிவு விலையில் உணவு வழங்கப்படும். 10 இடங்களிலும் இதே எண்ணிக்கையிலான நபர்களுக்கு மலிவு விலை உணவு வழங்கப்படும். இதற்காக திருப்பூர் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.2.75 கோடி கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்கும் பணியில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.