தமிழ் முரசு 03.06.2013
மலிவு விலை உணவகத்தில் ஒரே நாளில் 33,000 பொங்கல் சேல்ஸ்
சென்னை: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 200 மலிவு விலை உணவகம்
திறக்கப்பட்டுள்ளது. இதில் காலை 7 மணி முதல் 10 மணி வரை ஒரு இட்லி ஒரு
ரூபாய்க்கும் மதிய உணவாக 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம் 5
ரூபாய்க்கும் தயிர்சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு
மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, 200 உணவகத்திலும்
காலை இட்லியுடன் கூடுதலாக பொங்கல், சாம்பார் ரூ.5க்கும் நண்பகல் எலுமிச்சை
அல்லது கருவேப்பிலை சாதம் ரூ.5க்கும் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா
சென்னை கோட்டையில் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிலையில், 200
உணவகத்திலும் இன்று காலை முதல் பொங்கல், சாம்பார் வழங்கப்பட்டது. ஒரே
நாளில் மட்டும் 33ஆயிரத்து 398 பொங்கல் விற்பனையாகி உள்ளது. அத்துடன்
மதியம் சாம்பார் சாதத்துடன் கருவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம்
வழங்கப்பட்டது.