Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோத்தகிரி பேரூராட்சி மன்றக் கூட்டம்

Print PDF
தினமணி        04.06.2013

கோத்தகிரி பேரூராட்சி மன்றக் கூட்டம்


கோத்தகிரி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் சை.வாப்பு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 பேரூராட்சி செயல் அலுவலர் பழனி முன்னிலை வகித்தார். தலைமை எழுத்தர் ஜெக தீஸ் மாதாந்திர அறிக்கை வாசித்தார்.

 அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

 நடராஜ் (திமுக): பவானி ஆற்றில் கலக்கும் டானிங்டன் ஆறு, கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

 மேலும், ஆற்றின் அருகில் ஆக்கிரமிப்பால் நீரோடை குறுகியுள்ளது. இந்த ஆற்றைத் தூர்வாரி, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். குடிநீர்ப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

 சிவகுமார் (தேமுதிக): காமராஜர் சதுக்கம்-கோட்டஹால் ரோட்டில் நடைபாதையில் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்கின்றனர். இதற்குத் தடை விதிக்க வேண்டும்.

 ராஜேஸ்வரி வடிவேல்: காம்பாய் கடை அருகில் உள்ள ஆற்றைத் தூர்வார வேண்டும். மேலும், பேருந்து நிலையம்-காம்பாய் கடை செல்லும் வழியில் நீரோடைகள் உள்ள பகுதிகளில் சிலர் ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டுகின்றனர். இதைத் தடுக்க வேண்டும்.

 முகமது ஜாபர் (திமுக): கோத்தகிரி பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. வாகன நிறுத்தத்திற்கு பேரூராட்சி சார்பில் இடம் ஒதுக்கி கட்டணம் வசூலிக்க வேண் டும்.

 தலைவர் சை.வாப்பு: டானிங்டன் மற்றும் காம்பாய் கடை நீரோடைகளைத் தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

 நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, போக்குவரத்துக் காவல் துறைக்கு தகவல் கொடுத்து நடைபாதையில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வலியுறுத்தப்படும்.

 சுகாதார ஆய்வாளர் கண்ணன் பணியிட மாற்றத்தில் பேரூராட்சி நிர்வாகம் தலையிடாது. தேவைப்பட்டால் கவுன்சிலர்களும், சுகாதார ஆய்வாளரும் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் என்றார்.

 இதில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள செயல் அலுவலர் கெüரவிக்கப்பட்டார். துணைத் தலைவர் சுந்தரி நன்றி கூறினார்.