Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூரில் அம்மா உணவகம் 10 இடங்களில் திறப்பு காணொலி மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

Print PDF
தினதந்தி         02.06.2013

வேலூரில் அம்மா உணவகம் 10 இடங்களில் திறப்பு காணொலி மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்


வேலூரில் 10 இடங்களில் அம்மா உணவகம் திறந்து வைக்கப்பட்டது. இதனை காணொலி மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

அம்மா உணவகம்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் வேலூர் மாநகராட்சி உள்பட 9 மாநகராட்சி பகுதிகளில் மலிவு விலை அம்மா உணவகத்தை திறந்து வைத்தார். இதன்படி வேலூர் மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் அம்மா உணவகம் திறந்து வைக்கப்பட்டது.

வேலூர் அண்ணாசாலை எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகம் மற்றும் காட்பாடி டான்பாஸ்கோ பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் முகம்மது ஜான், கலெக்டர் சங்கர், மேயர் கார்த்தியாயினி, துணை மேயர் வி.டி.தருமலிங்கம், மாநகராட்சி கமிஷனர் ஜானகி, நகர்நல அலுவலர் பிரியம்வதா, பொறியாளர் தேவக்குமார், நகரமைப்பு அலுவலர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

10 இடங்களில்...

முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் காணொலி மூலம் திறந்த வைத்த அடுத்த சில நிமிடங்களில் வேலூரில் அம்மா உணவகம் செயல்பட தொடங்கியது. பொது மக்களுக்கு மதிய உணவாக சாம்பார் சாதம் ரூ.5–க்கும், தயிர் சாதம் ரூ.3–க்கும் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து கொசப்பேட்டை மார்க்கெட் பள்ளி அருகிலும், கஸ்பா நெடுந்தெரு, விருபாட்சிபுரம் பழைய வணிக வளாகம் பின்புறம், பாகாயம் பள்ளி அருகிலும், சத்துவாச்சாரி பீடி தொழிலாளர் குடியிருப்பு, கலெக்டர் அலுவலகம் எதிரில், அலமேலுமங்காபுரம், பாரதிநகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகமும் திறந்து வைக்கப்பட்டது. இதனை மேயர் கார்த்தியாயினி பார்வையிட்டார்.

10 இடங்களிலும் இன்று(திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் 11 மணி வரை இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கப்பட உள்ளது.