Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

1½ மணி நேரத்தில் அனைத்தும் விற்று தீர்ந்தன திருப்பூர் அம்மா உணவகங்களில் அலைமோதிய தொழிலாளர்கள்

Print PDF
தினதந்தி       04.06.2013

1½ மணி நேரத்தில் அனைத்தும் விற்று தீர்ந்தன திருப்பூர் அம்மா உணவகங்களில் அலைமோதிய தொழிலாளர்கள்


திருப்பூர் அம்மா உணவங் களில் உணவு சாப்பிட தொழிலாளர்கள் கூட்டம் நிரம்பியது. இதனால் 1½ மணி நேரத்தில் அனைத்து உணவுகளும் விற்று தீர்ந்தன.

அம்மா உணவகம்

திருப்பூர் மாநகரில் 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர்சாதம் ரூ.3 என்ற மலிவு விலையில் வழங்கப்படுகிறது. காலை 7 மணி முதல் காலை 10 மணிவரை இட்லி, சாம்பாரும், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம், தயிர் சாதமும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று காலை உணவகம் திறந்த 1½ மணி நேரத்திலேயே அனைத்து இட்லியும் விற்று தீர்ந்தன. இதன்காரணமாக மதியம் 11 மணி முதலே சாம்பார் சாதம், தயிர்சாதம் சாப்பிட டோக்கன் வாங்க பொதுமக்கள், தொழி லாளர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். மதியம் உணவகங்கள் திறந்த ஒரு மணி நேரத்திலேயே அனைத்தும் விற்று தீர்ந்தன.இதனால் பலர் உணவு கிடைக்காமல் ஏமாற் றத்துடன் திரும்பி சென்ற னர்.

இதுகுறித்து உணவகங்களின் கண்காணிப்பு குழு அதி காரியான மாநகராட்சி நகர் நல அதிகாரி டாக்டர் செல்வ குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:

திருப்பூரில் உள்ள 10 உண வகங்களில் ஒரு உணவகத்தில் நாள் ஒன்றுக்கு 1200 இட்லி, தலா 300 சாம்பார் சாதம், தயிர்சாதம் தயாரிக்க திட்ட மிடப்பட்டது. அதன்படி நேற்று 10 உணவகங்களிலும் 12 ஆயிரம் இட்லி, தலா 3 ஆயிரம் சாம்பார் சாதம், தயிர் சாதம் தயாரிக்கப்பட்டது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றதால் அனைத் தும் விற்று தீர்ந்து விட்டன. நாளை (இன்று) முதல் தேவைப்படும் உணவகங்களில் கூடுதலாக உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.