Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் திறப்பு

Print PDF
தினதந்தி       03.06.2013

நெல்லை மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் திறப்பு


நெல்லை மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் நேற்று அம்மா உணவகம் தொடங்கப்பட்டது.

அம்மா உணவகம்

சென்னையில் ஏழை–எளிய மக்கள் குறைந்த விலையில் உணவு சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சென்னை மாநகராட்சி பகுதியில் மலிவு விலை உணவகம் என்ற அம்மா உணவகத்தை தொடங்கினார்.ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர்சாதம் ஆகியவை அங்கு வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்துக்கு சென்னையில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

நெல்லையிலும் தொடங்கப்பட்டது


நெல்லை மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் அம்மா உணவகம் தொடக்கப்பட்டு உள்ளது.மேலப்பாளையம் வார்டு அலுவலகம் அருகே, அரசு ஆஸ்பத்திரி அருகே, தச்சநல்லூர் மண்டல அலுவலகம், பேட்டை மாநகராட்சி மருத்துவமனை வளாகம், டவுன் தொண்டர் சன்னதி அருகே உள்ள வார்டு அலுவலகம், வையாபுரிநகர் மேல்நிலை நீர்தேக்கதொட்டி அருகே, பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளை ஆஸ்பத்திரி வளாகம்.

அம்பேத்கார் காலனி, திம்மராஜபுரம் வார்டு அலுவலகம், நெல்லை சந்திப்பு கணேசபுரம் தொடக்கபள்ளி கட்டிடம் ஆகிய 10 இடங்களில் இந்த அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உணவகத்தில் உணவு தயார் செய்யும் பணியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த உணவகங்களை சென்னையில் இருந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வீடியோகான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

அமைச்சர் செந்தூர் பாண்டியன்

மேலப்பாளையம் வார்டு அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டு இருந்த அம்மா உணவகத்தில் நடந்த விழாவுக்கு மேயர் விஜிலா சத்யானந்த் தலைமை தாங்கினார். கலெக்டர் சி.சமயமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், டாக்டர் துரையப்பா, முத்துச்செல்வி, துணைமேயர் ஜெகநாதன் என்ற கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் பி.செந்தூர்பாண்டியன் கலந்து கொண்டு உணவுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் உணவுகளை வாங்கி சாப்பிட்டனர். உணவுடன் சர்க்கரை பொங்கல் இலவசமாக வழங்கப்பட்டது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் ஆர்.முருகையாபாண்டியன், நெல்லை மாநகராட்சி மண்டல தலைவர்கள் மோகன், எம்.சி.ராஜன், ஹைதர்அலி, தச்சை மாதவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்திவேல் முருகன், மாணிக்கராஜ், மாநகராட்சி ஆணையாளர் த.மோகன், என்ஜினீயர் ஜெய் சேவியர், உதவி ஆணையாளர்கள் சாந்தி, சாமுவேல் செல்வராஜ், தாசில்தார் சேதுராமலிங்கம், யூனியன் தலைவர் கல்லூர் இ.வேலாயுதம், பேரவை செயலாளர் சுதா பரமசிவன், துணை செயலாளர் தச்சை கணேசராஜா, பொருளாளர் ஆர்.பி.ஆதித்தன், பகுதி செயலாளர் எஸ்.டி.காமராஜ், கவுன்சிலர்கள் பரணி சங்கரலிங்கம், ஆறுமுகம், பரமசிவன், கட்சி நிர்வாகிகள் மகபூப்ஜான், கணபதிசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.