Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புழல் சிறை அருகில் "அம்மா' உணவகம் தொடக்கம்

Print PDF
தினமணி         07.06.2013

புழல் சிறை அருகில் "அம்மா' உணவகம் தொடக்கம்


சென்னை புழல் சிறை அருகில் "அம்மா' உணவகம் கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் பேரில், புழல் மத்திய சிறை எதிரே 22-வது வார்டு அலுவலகம் அருகே "அம்மா' மலிவு விலை உணவகம் கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. புழல் பகுதி மக்களும், சிறைக் கைதிகளை பார்க்க வரும் உறவினர்களும் ரூ.5-ல் பொங்கல், ஒரு ரூபாயில் இட்லி ஆகியவற்றை சாப்பிட்டுச் செல்கின்றனர்.