தினமணி 18.06.2013
நகராட்சிகளில் குறைதீர்க் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகளிலும் நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் மொத்தம் 117 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் நகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆணையர் விமலா தலைமை வகித்தார். கூட்டத்தில் பசுமை வீடு, குடிநீர் பிரச்னை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 15 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, தீர்வு காணப்படும் என்று ஆணையர் விமலா தெரிவித்தார்.
இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள 8 நகராட்சிகளில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் 117 மனுக்கள் பெறப்பட்டன.