Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கருணை அடிப்படையில் பணி ஆணை பெற்றவர்கள் மேயருக்கு நன்றி

Print PDF

தினமணி               19.06.2013

கருணை அடிப்படையில் பணி ஆணை பெற்றவர்கள் மேயருக்கு நன்றி

கருணை அடிப்படையில் பணி ஆணை பெற்றவர்கள் மேயர் சௌண்டப்பனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சேலம் மாநகராட்சியில் பணியாற்றி உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளர்களின் வாரிசுகள் தங்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வலியுறுத்தி, கடந்த ஜூன் 11-ஆம் தேதி மாநகராட்சி வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, தகுதியுடையவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் பணி ஆணை வழங்கப்படும் என மேயர் சௌண்டப்பன் தெரிவித்தார்.

இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவின் போது, தகுதியுடைய 118 பேருக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கப்பட்டது. அவர்கள் மேயர் சௌண்டப்பனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது, மாநகராட்சி ஆணையர் அசோகன், துணை மேயர் நடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.