Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பள்ளபாளையம் பேரூராட்சியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினத்தந்தி               19.06.2013

பள்ளபாளையம் பேரூராட்சியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சூலூர் ஒன்றியம் பள்ளபாளையம் பேரூராட்சியில் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் வி.கே.சண்முகம் தொடங்கி வைத்தார். பாரதிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் அனைத்து வார்டுகள் வழியாக சென்று பேரூராட்சி அலுவலகதை அடைந்தது. ஊர்வலத்தின் போது மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஊர்வலத்தில் பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்.பிரகாஷ், செயல் அலுவலர் ரா.சுந்தர்ராஜ், வார்டு உறுப்பினர்கள் ஆனந்தகுமார், குமாரசாமி, பிரேமாகுமார், செல்வி, வசந்தகுமார், ரவிச்சந்திரன், மற்றும் அலுவலக பணியாளர்கள், ஆசிரிய–ஆசிரியைகள், மாணவ–மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.