தினமலர் 21.06.2013
மழைநீர் விழிப்புணர்வு பேரணி
திருமழிசை: மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
திருமழிசையில் நடந்த மழை நீர் சேகரிப்பு குறித்து நடந்த விழிப்புணர்வு பேரணிக்கு, பேரூராட்சி தலைவர் அமுதா முனுசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மகாதேவன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி அலுவலர் ஜோசப் வரவேற்புரையாற்றினார். பேரூராட்சிகளின் இணை இயக்குனர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில், பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்த விளம்பர பதாகைகள் ஏந்தி, முக்கிய வீதிகளின் வழியாக பேரணி நடந்தது.