தினமலர் 25.06.2013
மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி நெல்லையில் விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி : மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி நெல்லை சி.என்.கிராமத்தில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. நெல்லை
மாநகராட்சி சார்பில் கட்டடங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு
ஏற்படுத்தவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு குறித்த
விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள்
பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நெல்லை சி.என்.கிராமத்தில் துவங்கி, நெல்லை
ஜங்ஷன் தச்சநல்லூர் மண்டல அலுவலகம் வரை நடந்தது. பேரணியை மேயர் விஜிலா
சத்தியானந்த் துவக்கி வைத்தார். துணைமேயர் ஜெகநாதன், கமிஷனர் மோகன்
முன்னிலை வகித்தார். இதில் மண்டல தலைவர் மாதவன், மாநகராட்சி கவுன்சிலர்
சிதம்பஜோதி, சண்முகவேல், சுகாதாரக்குழு தலைவர் வண்ணை கணேசன், வேல்முருகன்,
முத்துராஜ், செயற்பொறியாளர் நாராயணன் நாயர், உதவிக் கமிஷனர் ஜோதிலிங்கம்,
தலைமை ஆசிரியை நாராயண சுந்தரி, பேச்சாளர் முருகன் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.