Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு

Print PDF

தினகரன்             25.06.2013 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு

வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர்: வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஆம்பூர் இந்து மேனிலைப்பள்ளியில் இருந்து நகராட்சி தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஆணை யாளர் (பொறுப்பு) குமார் முன்னிலை வகித்தார். முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.இதில், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்க தலைவர் மதியழகன், வேலூர் மேற்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் பாலசுப்பிரமணி, கவுன்சிலர்கள் சீனிவாசன், சரவணன், பிலால் அஹ்மத், ஆகில் அஹ்மத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு நகராட்சி சார்பில் நடந்த மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நகராட்சி தலைவர் காத்தவராயன் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் ஆலியார்ஜுபேர் அஹமத் முன்னிலை வகித்தார். பொறியாளர் ஜெயகுமார் வரவேற்றார்.
இதில், கவுன்சிலர்கள், வருவாய் ஆய்வாளர் இன்பசேகரன், துப்புரவு ஆய்வாளர்கள் சந்திரசேகரன், ஆதிகேசவலு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆற்காடு: ஆற்காடு நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து புறப்பட்ட மழைநீர் விழிப்புணர்வு ஊர்வலத்தை நகராட்சி தலைவர் ஆர்.புருஷோத்தமன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில், துணை தலைவர் எஸ்.கீதாசுந்தர், ஆணையா ளர் செ.பாரிஜாதம், பொறி யாளர் கார்த்திகேயன், சமுதாய அமைப்பாளர் ம.துரை, கவுன்சிலர்கள் கோபி, செந்தில்குமார், பார்த்தசாரதி, பாலாஜி, மல்லிகா, லதா சோமசேகரன் மற்றும் ஜி.வி.சி. பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் முருகன் நன்றி கூறினார்.

வாலாஜா: வாலாஜா நகராட்சி சார்பில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மகாத்மா காந்தி பூங்கா அருகே நகராட்சி தலைவர் வேதகிரி துவக்கி வைத்தார். துணைத்தலைவர் மூர்த்தி, ஆணையாளர் சங்கர் முன்னிலை வகித்தனர்.பின்னர், அரசு பெண்கள் பள்ளியில் நடந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா, மாவட்ட கவுன்சிலர் சுமைதாங்கி ஏழுமலை, வாலாஜா நகர செயலாளர் மோகன், வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் நாரயணன், பள்ளி தலைமையாசிரியர் மணிவண்ணன் மற்றும் கவுன்சிலர்கள் முரளி, அபிபுல்லா, ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.