Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாத்தூர் நகர்மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி                28.06.2013

சாத்தூர் நகர்மன்றக் கூட்டம்

சாத்தூரில் நகர்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

  விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர்மன்றக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் டெய்சிராணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

   கூட்டத்தில் 24-ஆவது வார்டு உறுப்பினர் மணி, 7-ஆவது வார்டு உறுப்பினர், 15-ஆவது வார்டு உறுப்பினர் கலாவதி, 4-ஆவது வார்டு உறுப்பினர் வீரலட்சுமி ஆகியோர்  கூறுகையில்: தங்களது வார்டில் கடந்த ஒரு வாரமாக, குடிநீர் சரியாக வரவில்லை, இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதிலும் இல்லை, எனவே வார்டில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

   14-ஆவது வார்டு உறுப்பினர் கண்ணன் கூறுகையில்: வார்டில் பன்றிகள் அதிகமாக உள்ளன. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரியபடுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என்றார்.

  சுகாதார அலுவலர் தர்மராஜ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் நகராட்சிக் கூட்டத்தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சுகாதார அலுவலர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.