மாலைமலர் 24.09.2009
அரசு சுவர்களில் விளம்பரம் செய்த 100 பேர் மீது வழக்கு : சேலம் கோர்ட்டில் அபராதம் கட்ட நடவடிக்கை
சேலம், செப் 24-
சேலம் மாநகராட்சி பகுதிகளில் போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து அரசு சுவர்களில் விளம்பரம் அனுமதி பெறாமல் எழுதியவர்கள் மீது கடந்த சில நாட்களாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
நேற்றும் அனைத்து பகுதிகளுக்கும் போலீசார் சென்று கண்காணித்தனர்.
நேற்று மட்டும் ஒரே நாளில் 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அந்தந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது குறித்து தகவல் தெரிவித்து வருகின்றனர். இவர்கள் கோர்ட்டில் அபராதம் கட்டவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலக சுற்று சுவற்றிலும் பலர் நோட்டீஸ், விளம்பரம் எழுதி வந்தனர். இப்போது இந்த சுவரும் சுத்தம் செய்து சுண்ணாம்பு அடிக்கப்பட்டு இருக்கிறது.
இதுபோல் அனைத்து அரசு அலுவலகங்களில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்கள் அழிக்கப்பட்டு சுண்ணாம்பு அடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.