தினமணி 10.07.2013
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி
நாட்டறம்பள்ளியில் அனைத்து வீடுகள், கட்டடங்களிலும் ஜூலை 15-க்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வலியுறுத்தி, விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இப்பேரணிக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் வெ.சரோஜா தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஜலேந்திரன், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.