தினகரன் 12.07.2013
4 புதிய பேரூராட்சி அலுவலகங்கள் திறப்பு
ஈரோடு, :ஈரோடு மாவட்டத்தில் ரூ.85 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4 பேரூராட்சி அலுவலகங்கள் வரும் 14ம் தேதி திறக்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் காஞ்சிக்கோவில், கருமாண்டிசெல்லிபாளையம், நல்லாம்பட்டி, பெரியகொடிவேரி ஆகிய 4 பேரூராட்சி அலுவலகங்களின் கட்டிடங்கள் பழுதடைந்தும், இடநெருக்கடியிலும் இருந்து வந்தது. இதையடுத்து புதிய அலுவலகங்கள் கட்டிக்கொடுக்க உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, காஞ்சிக்கோவில், கருமாண்டிசெல்லிபாளையம், நல்லாம்பட்டி ஆகிய இடங்களில் தலா ரூ.20 லட்சம் செலவிலும், பெரியகொடிவேரியில் ரூ.25 லட்சம் செலவிலும் மொத்தம் 4 பேரூராட்சிளில் ரூ.85 லட்சம் செலவில் புதிய பேரூராட்சி அலுவலகங்கள் கட்டப்பட்டன. இப்பேரூராட்சி அலுவலகங்களை தமிழக வருவாய்துறை அமைச்சர் தோப்புவெங்கடாசலம் வருகின்ற 14ம் தேதி திறந்து வைக்கிறார். இவ்விழாவிற்கு கலெக்டர் சண்முகம் தலைமை தாங்குகிறார்.