Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி ஊழியர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

Print PDF
தினகரன்        02.08.2013

மாநகராட்சி ஊழியர்களுக்கு கண் சிகிச்சை முகாம்


திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில் பணிபுரியும் அனைத்து துப்புரவு தொழிலாளர்களுக்கும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில், திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இலவச கண்சிகிச்சை முகாம் நேற்று நடத்தப்பட்டது. முகாமை மேயர் விசாலா ட்சி தொடங்கி வைத்தார். இதில் 106 பேருக்கு கண் பரிசோதனை மற்றும் ஆலோ சனை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், துணை மேயர் குணசேகரன், மாநகர் நல அலுவலர் செல்வக்குமார், உதவி ஆணையர் (கணக்கு) சந்தானநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.