தினமலர் 03.08.2013
மழைநீர் சேகரிப்புவிழிப்புணர்வு
பல்லடம்:பல்லடம் கண்ணம்மாள் நேஷனல் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பல்லடம் பஸ் ஸ்டாண்ட் முன் துவங்கிய ஊர்வலத்தை, பள்ளி முதல்வர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். கோவை மெயின் ரோடு, கொசவம்பாளையம் ரோடு, என்.ஜி.ஆர்., ரோடு பகுதிகள் வழியாக சென்று, திருப்பூர் ரோட்டில் உள்ள பள்ளியில், ஊர்வலம் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் சென்ற மாணவர்கள், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து, கோஷம் எழுப்பினர். இதேபோல், அவிநாசியிலும், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், நேற்று நடந்தது.
அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் துவங்கிய ஊர்வலத்துக்கு, பேரூராட்சி தலைவி ஜெகதாம்பாள் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சரவணபவன், ஊர் வலத்தை துவக்கி வைத்தார். மெயின் ரோடு, மேற்கு, வடக்கு, கிழக்கு ரத வீதிகள்வழியாக சென்ற ஊர்வலம், மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், துணை தலைவர் மூர்த்தி, அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.