Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாடம்பாக்கத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினத்தந்தி             08.08.2013

மாடம்பாக்கத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

சென்னையை அடுத்த மாடம்பாக்கம் பேரூராட்சி பகுதியில், அரசு பள்ளிக்கூட மாணவ–மாணவிகள் மற்றும் மாடம்பாக்கம் பேரூராட்சி ஊழியர்கள் இணைந்து மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

பேரணியை பேரூராட்சி தலைவர் விமலா தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் தேவந்திரன், செயல் அலுவலர் சுமா, மாடம்பாக்கம் லோகநாதன், கவுன்சிலர்கள் சாய்சங்கரி, நித்யஉமாபதி உட்பட பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.