Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினகரன்            08.08.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

தாம்பரம், : சிட்லபாக்கம் பேரூராட்சி சார்பில் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் மழைநீரை சேகரிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை சிட்லபாக்கம் பேரூராட்சி தலைவர் மோகன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரூராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி, அண்ணா தெரு, நேரு தெரு, காந்தி தெரு உள்ளிட்ட தெருக்களின் வழியாக சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலகம் வந்தடைந்தது.

சிட்லபாக்கம் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதகைகளை ஏந்தி சென்றனர்.  மழைநீரை சேமித்தால் நகரை பசுமையாக மாற்றாலம் என்பதை வலியுறுத்தும் வகையில் பச்சை வண்ண ஆடை அணிந்திருந்தனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், துணை தலைவர் வீராசாமி, ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனத்தினர், கவுன்சிலர்கள் கலந்து கொண்டார்கள்.