Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினகரன்               12.08.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

தொட்டியம், :  தொட்டியம் பேரூ ராட்சி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தொட்டியம் பேரூராட்சித்தலைவர் தமிழ்ச்செல்வி திருஞானம் பேரணிக்கு தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஐயப் பன், செயல் அலுவலர் சித்ரா, முன் னாள் அறங்காவலர் குழுத் தலைவர் திரு ஞானம், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் கவியரசன், உதவி தலைமையாசிரியர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் சின்னச்சாமி வரவேற்றார்.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி முக் கிய வீதிகள் வழியாக மீண் டும் பள்ளி மைதான த்தை வந்தடைந்தது. பேரூராட்சி அலுவலர் சம் பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.