Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் சுதந்திர தின விழா:மேயர் தேசியக் கொடி ஏற்றினார்

Print PDF

தினமணி              16.08.2013

மாநகராட்சியில் சுதந்திர தின விழா:மேயர் தேசியக் கொடி ஏற்றினார்

மதுரை மாநகராட்சியில் நடந்த சுதந்திர தின விழாவில் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா தேசியக் கொடி ஏற்றினார்.

  மாநகராட்சி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா தேசியக் கொடி ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், மதுரையில் கடந்த ஆண்டில் ரூ.139.43 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்படுóத்தி வருகின்றன.

  நடப்பாண்டில் பிளாஸ்டிக் சாலைகள், உள்வட்ட சுற்றுச் சாலைகள், மேம்பாலங்கள் அமைப்பு,  பள்ளிக் கட்டடங்கள், குழந்தைகள் ஊட்டச் சத்துணவு மையக் கட்டடம்,  மணடல அலுவலகக் கட்டடங்கள் என பல்வேறு புதிய திட்டஙகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெறுகின்றன. மொத்தம் ரூ.287.52 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் மேறகொள்ளப்படுகின்றன. 

  மேலும், அவனியாபுரத்தில் ரூ.9.50 ஏக்கர் பரப்பளவில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட உள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான குடிநீர், மழைநீர் வடிகால் வசதி, பாதாளச் சாக்கடை வசதிகள்  போன்ற புதிய திட்டங்கள் அரசு ஒப்புதலுடன் நிறைவேற்றத் திட்டமிடப்படுள்ளது என்றார்.

 நிகழ்ச்சியில், அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கும் சிறந்த ஆசிரியரகளுக்கும் மேயர் பரிசுகளை வழங்கினார். பிறகு மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  விழாவில், ஆணையர் ஆர். நநதகோபால், துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன. துணை ஆணையர் (பொறுப்பு) சின்னம்மாள், நகரப் பொறியாளர் (பொறுப்பு) மதுரம், மண்டலத் தலைவர்கள் ராஜபாண்டியன், ஜெயவேல், சாலைமுத்து, மாநகராட்சி கல்வி அலுவலர் மதியழகராஜ், முதன்மை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் நீ.சித்திரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.