தினகரன் 19.08.2013
சிறந்த மாநகராட்சியாக ஈரோடு தேர்வு அரசுக்கு அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பு நன்றி
ஈரோடு, : தமிழக அளவில் ஈரோடு மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்து சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில் ஈரோடு மேயர் மல்லிகாபரமசிவத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசு கேடயம் வழங்கினார். இதைதொடர்ந்து ஈரோடு வந்த மேயர் மல்லிகாபரமசிவத்தை ஈரோடு மாநகராட்சி அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் ஆறுமுகம், விஜயகுமார், ராதாகிருஷ்ணன், செல்வராஜ், சண்முகவடிவு, ரவிச்சந்திரன், ஆறுமுகம், கவுரி மற்றும் அனைத்து அலுவலர் மற்றும் பணியாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். துணைமேயர் பழனிசாமி, ஆணையாளர் விஜயலட்சுமி ஆகியோரையும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் ஈரோடு மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் விஜயகுமார், பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சிறந்த மாநகராட்சியாக ஈரோடு மாநகராட்சியை தேர்வு செய்ததற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எங்களது கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.