Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு

Print PDF

தினமலர்              21.08.2013

மாநகராட்சியில் நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு


திருச்சி: திருச்சி மாநகராட்சியில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மேயர் ஜெயா தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி, துணைமேயர் ஆசிக் மீரா, பொன்மலை கோட்டத் தலைவர் மனோகரன், கவுன்சிலர் ஹேமா, செயற்பொறியாளர் நாகேஷ், நகர் நல அலுவலர் அல்லி, உதவி கமிஷனர்கள் பிரபுகுமார், உதயசூரியன் மற்றும் பணியாளர்கள் நல்லிணக்க உறுதி மொழி ஏற்றனர்.