Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர்              21.08.2013

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் கல்லூரி மாணவர்கள்,நகராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நகராட்சி அலுவலகத்தில் துவங்கிய பேரணியை நகர்மன்றத் தலைவர்(பொ) அப்துல் ரகுமான் துவக்கி வைத்தார். கமிஷனர்(பொ) சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் ராமதாஸ், கண்ணன், தியாராஜன், மோகன், அய்யப்பன், உட்பட பலர் பங்கேற்றனர்.

பேரணியின் போது நகரின் முக்கிய வீதிகள் சாலைகளில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் கொட்டப்பட்டது.