Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஓட்டல் அமைக்க இடம் கிடைக்காததால் நடமாடும் அம்மா உணவகம் அறிமுகம்: மாநகராட்சி ஏற்பாடு

Print PDF

மாலை மலர்             22.08.2013

ஓட்டல் அமைக்க இடம் கிடைக்காததால் நடமாடும் அம்மா உணவகம் அறிமுகம்: மாநகராட்சி ஏற்பாடு
 
ஓட்டல் அமைக்க இடம் கிடைக்காததால் நடமாடும் அம்மா உணவகம் அறிமுகம்: மாநகராட்சி ஏற்பாடு
 
ஏழை, எளிய மக்கள் பயன் அடையும் வகையில் அம்மா உணவகங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா 6 மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். சென்னை நகரில் மாநகராட்சி சார்பில் வார்டுக்கு ஒன்று வீதம் 200 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், பொங்கல், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.

இதன் காரணமாக அம்மா உணவகங்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. எனவே, சென்னையில் அதிக எண்ணிக்கையில் அம்மா உணவகங்களை திறக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதன்படி சென்னை நகரில் மாநகராட்சி சார்பில் 1000 அம்மா உணவகங்களை இந்த ஆண்டுக்குள் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. கவுன்சிலர்களுக்கு ஒதுக்கப்படும் வார்டு வளர்ச்சி நிதி மூலம் இந்த உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.

கூடுதலாக அம்மா உணவகங்களை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் வார்டு கவுன்சிலர்கள் ஈடுபட்டுள்ளனர். என்றாலும் அதற்கு பொருத்தமான இடங்கள் கிடைக்காத நிலை உள்ளது.

எனவே, கூடுதலாக அம்மா உணவகங்கள் அமைக்க பொருத்தமான இடம் கிடைக்காததால் வார்டு பகுதிகளில் நடமாடும் அம்மா உணவகங்களை, அமைக்க வேண்டும், என்று பெரும்பாலான கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

விரைவில் இந்த நடமாடும் அம்மா உணவகங்கள் அமைக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக அம்மா உணவகங்கள் அமைக்க இடம் கிடைக்காத பகுதிகளில் இந்த நடமாடும் அம்மா உணவகங்கள் செயல்பட உள்ளன.

தற்போது அமைக்கப்பட்டுள்ள 200 அம்மா உணவகங்கள் மூலம் 2 ஆயிரத்து 400 பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். உணவு சமைப்பது, அதை பரிமாறுவது போன்ற வேலைகளை இவர்கள் செய்து வருகிறார்கள்.

நடமாடும் அம்மா உணவகங்கள் உள்பட ஆயிரம் உணவகங்கள் தொடங்கப்பட்டால் இதன் மூலம் மேலும் 10 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் கூலி வேலை செய்பவர்கள் போதிய வருமானம் இல்லாத ஏழை எளியவர்கள் மிகுந்த பயன் பெறுவார்கள். எனவே, நடமாடும் அம்மா உணவகங்கள் உள்பட 1000 அம்மா உணவகங்களை விரைவில் சென்னை நகரில் திறக்கும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி இறங்கி உள்ளது.