Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைக்காலத்தை எதிர்கொள்வது எப்படி? நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை

Print PDF

தினமணி             23.08.2013

மழைக்காலத்தை எதிர்கொள்வது எப்படி? நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை

விழுப்புரம் நகரில் மழையால் ஏற்படும் நிலைமைகளை சமாளிப்பது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆணையருடனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

 நகர் மன்றத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ராஜேந்திரன், நகராட்சி பொறியாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் மழையால் பல்வேறு இடங்களில் நீர் தேங்குவது, அவற்றை சீரமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.