Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினத்தந்தி            30.08.2013

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பெத்தநாயக்கன்பாளையம் தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு பேரூராட்சி தலைவர் ஆர்.பி.ராமகிருஷ்னன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மாதேஸ்வரன் வரவேற்றார். மழைநீர் சேகரிப்பு குறித்த வாசகங்களை மாணவ–மாணவிகள் ஏந்தியபடி முக்கிய வீதிகளின் வழியாக சென்றார்கள். இதில் துணை தலைவர் சுகந்தி, வார்டு உறுப்பினர்கள் காஞ்சனா, அருணாசலம், சந்திரா, வெங்கடேஷ், சுப்பிரமணியன், பானுமதி, அண்ணாமலை, உமா, பெருமாயி,சீதாரமன், சத்தியசீலன்,ஜெயமணி மற்றும் அலுவலக பணியாளர்கள் தொண்டு நிறுவனத்தினர், மகளிர் சுய உதவிகுழுவினர் கலந்து கொண்டார்கள்.