தினத்தந்தி 01.10.2013
திருச்சி மாநகராட்சியில் குறைதீர்க்கும் கூட்டம்
![](http://www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/trichy_corporation_office.jpg)
திருச்சி மாநகராட்சியில் மேயர் ஜெயா
தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாநகரின் பல்வேறு
பகுதிகளை சேர்ந்தவர்கள் 24 கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர். இந்த
மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மேயர் நடவடிக்கை மேற்கொண்டார். கூட்டத்தில்
ஆணையர் தண்டபாணி, துணை மேயர் மரியம் ஆசிக், நகர பொறியாளர் சந்திரன்,
செயற்பொறியாளர்கள் அருணாச்சலம், நாகேஷ், நகர் நல அலுவலர் அல்லி மற்றும்
அதிகாரிகள் கலந்து கொண்டனர்.