Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி மாநகராட்சி குறைதீர் நாள் கூட்டம்

Print PDF

தினமலர்             29.10.2013

திருச்சி மாநகராட்சி குறைதீர் நாள் கூட்டம்

திருச்சி: திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று காலை நடந்தது. கமிஷனர் தண்டபாணி, துணைமேயர் ஆசிக்மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆக்ரமிப்புகள் அகற்றுதல், தெருவிளக்கு சரி செய்தல், கழிப்பிட பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 15 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் தள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் நகர பொறியாளர் சந்திரன், நகர் நல அலுவலர் மாரியப்பன், செயற்பொறியாளர்கள் அருணாச்சலம், நாகேஷ் மற்றும் உதவி கமிஷனர்கள், உதவி செயற்பொறியாளர்கள் பங்கேற்றனர்.