Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தொட்டியம் பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினகரன்           29.10.2013

தொட்டியம் பேரூராட்சி கூட்டம்

தொட்டியம், : தொட்டியத்தில் பேரூராட்சி கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் தமிழ்செல்வி திருஞானம் தலைமை வகித்தார்.

துணைத் தலைவர் ஐயப்பன், செயல் அலுவலர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தொட்டியம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறு பழுதடைந்து உள்ளதை சீரமைத்து தர வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் தமிழ்செல்வி உறுதியளித்தார். கவுன்சிலர்கள் கவியரசன், ரமேஷ், பொன்னுசாமி, சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். எழுத்தர் சம்பத் நன்றி கூறினார்.