தினகரன் 30.10.2013
மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு உறுதிமொழி
திருச்சி, : மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று அரசு ஊழியர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் வருகிற 2ம் தேதி வரை ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றல் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி, திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று ஆணையர் தண்டபாணி தலைமையில் மாநகராட்சி அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றனர். செயற்பொறியாளர் நாகேஷ், உதவி ஆணையர்கள் தனபாலன், பிரபு குமார் ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.