Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மா உணவகங்களில் நாளை இலவச இனிப்பு: மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

மாலை மலர்          02.11.2013

அம்மா உணவகங்களில் நாளை இலவச இனிப்பு: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

முதல்– அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட 200 அம்மா உணகங்களிலும், மலிவு விலையில் தரமான, சுத்தமான உணவுகளை வழங்கி பொது மக்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

தீபாவளித் திருளான நாளை (2–ந்தேதி) சென்னை மாநகராட்சியில் உள்ள 200 அம்மா உணவகங்களும் செயல்படும் எனவும், தீபாவளித் திருநாளையொட்டி 200 அம்மா உணவகங்களிலும் நாளை காலை வேளையில் சிற்றுண்டி சாப்பிட வரும் பொது மக்களுக்கு சிற்றுண்டியுடன் இனிப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.