Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர், கழிவுநீர் பிரச்னைக்கு நாளை புகார் தெரிவிக்கலாம்

Print PDF

தினகரன்            08.11.2013

குடிநீர், கழிவுநீர் பிரச்னைக்கு நாளை புகார் தெரிவிக்கலாம்

சென்னை, : குடிநீர், கழிவுநீர் பிரச்னை குறித்து நாளை நடக்கும் திறந்தவெளி கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை:

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாதந்தோறும் 2வது சனிக்கிழமை நடைபெறும் திறந்தவெளி கூட்டம், நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, குடிநீர் வாரியத்தின் அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதி அலுவலகங்களிலும் நடக்கிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் மற்றும் குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் குறித்த சந்தேகங்களை மனுக்கள் வாயிலாக விண்ணப்பித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பகுதி அலுவலக கூட்டமும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும். கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் 28 மனுக்கள் பெறப்பட்டு, 25 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.